Sunday 28th of April 2024 02:17:35 AM GMT

LANGUAGE - TAMIL
-
பாதாளக் குழு உறுப்பினர் ஒருவர் நீர்கொழும்பில் சுட்டுப் படுகொலை!

பாதாளக் குழு உறுப்பினர் ஒருவர் நீர்கொழும்பில் சுட்டுப் படுகொலை!


பாதாளக் குழு உறுப்பினரான ரத்மலானே ரொஹா என்ற ரோஹன டி சில்வா, இன்று அதிகாலை நீர்கொழும்பு, கொச்சிக்கடைப் பகுதியில் வைத்து பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

அதிகாலை 3 மணியளவில் இயந்திரப் படகு மூலம் அவர் இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல முயற்சித்தபோதே துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் அவரிடமிருந்து ரி - 56 ரகத் துப்பாக்கி ஒன்றும், ஒரு இலட்சம் இந்திய ரூபாவும் மீட்கப்பட்டுள்ளன.

படுகொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகள் இவருக்கு எதிராக உள்ளன.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கொழும்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE